tamilnadu

img

மீண்டும் அடி வாங்கிய பங்குச்சந்தைகள்

மும்பை:
இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவுப் பாதைக்கே திரும்பியுள்ளன. இந்திய பங்குச் சந்தைகளின் தொடர் சரிவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் வரிக்குறைப்பு அறிவிப்புக்களை வெளியிட்டார்.

இதனால், அடுத்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் வரை பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. சந்தைகளுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே இனி ஏறுமுகம்தான் என்று பாஜக அமைச்சர்கள் கூறிவந்தனர்.இந்நிலையில்தான், இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை நோக்கித் திரும்பியுள்ளன. கடந்தவாரம் 39 ஆயிரத்து 135 புள்ளிகள் என்ற அளவிற்கு உச்சம் தொட்ட மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், கடந்த சில நாட்களில் சுமார் ஆயிரத்து 450 புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 106 புள்ளிகளாக இருந்தது. தேசியபங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிப்டி 45 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 314 புள்ளிகளாக நிலைபெற்றது.இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று காலை 38 ஆயிரத்து 401 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், திடீரென இறக்கம் கண்டு வர்த்தக நேர முடிவில், 37 ஆயிரத்து 673 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. அதாவது, ஒரே நாளில் 433 புள்ளிகள் இறக்கம் கண்டுள்ளது.வியாழக்கிழமையன்று 11 ஆயிரத்து 314 புள்ளிகளில் நிறைவடைந்து இருந்த, தேசியப் பங்குச் சந்தையான ‘நிப்டி’யும், வெள்ளியன்று காலை 11 ஆயிரத்து 388 புள்ளிகள் என்ற ஏற்றத்தில் ஆரம்பித்து, இறுதியில் 11 ஆயிரத்து 174 புள்ளிகளில் நிறைவடைந்து உள்ளது. ஒரே நாளில் 139 புள்ளிகள் இறக்கம் கண்டுள்ளது.

;